16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று (23.08.2026) வெளியிட்டுள்ளார்.
மேலும் இச்சட்டத்தை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு, அவற்றின் உலகளாவிய வருவாயில் 10 சதவீதம் வரையிலான அபராதம் விதிக்கவும் அச் சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
சமூக ஊடகத் தடை
இந்த புதிய சட்டத்தின்படி, சமூக ஊடநிறுவனங்கள் பயனர்களின் வயதை உறுதிப்படுத்துவதற்காக ஏற்கனவே உள்ள கணக்குத் தகவல்கள், முக அடையாள தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

எனினும், இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான ஆதரவைப் பெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
லக்சனின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி இந்த முன்மொழிவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

