அமெரிக்காவின் நியூயார்க் மேயராக இருந்த எரிக் ஆடம்ஸ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து நியூயார்க்கில் நடைபெற்ற மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்தானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த கர்டிஸ் ஸ்லிவாவும், முன்னாள் ஆளுநரான ஆண்ட்ரூ கியூமோவும் சுயேச்சையாக களம் கண்டனர்.
இந்நிலையில், நியூயார்க் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்தானி அபார வெற்றி பெற்றார். பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சுதந்திர தின உரையை மேற்கோள் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், டிரம்பின் வரி விதிப்பு மற்றும் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக கடுமையாக விமர்சித்தார்.
34 வயது ஆகும் ஜோரான் மம்தானி, உகாண்டா தலைநகர் கம்பாலாவில் பிறந்தவர். இவரது தந்தை, உகாண்டாவைச் சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி. இவரது தாய், சலாம் பாம்பே, நியூயார்க் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒடிசாவைச் சேர்ந்த மீரா நாயர்.
தனது 7 வயதில் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்த ஜோரான் மம்தானி, சிறு வயது முதலே அரசியல் மீது ஆர்வம் கொண்டு இருந்தார்.
இந்நிலையில், 1969-ம் ஆண்டிற்கு பிறகு, நியூயார்க் நகரத்தில் 20 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் வேட்பாளராகி மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.
சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க் நகரத்தின் இளம் மேயர் எனும் பெருமையையும் பெற்றுள்ள மம்தானி, வரும் ஜனவரி 1 ஆம் தேதி நியூயார்க் மேயராக பதவியேற்க உள்ளார்.
November 05, 2025 11:20 AM IST

