• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நினைத்தது நிறைவேற செவ்வாய்கிழமை வழிபாடு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 2, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நினைத்தது நிறைவேற செவ்வாய்கிழமை வழிபாடு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செவ்வாய்கிழமையில் முருகப் பெருமானை வேண்டி எந்த வழிபாடு, விரதம் ஆகியவற்றை மேற்கொண்டாலும் அது பல மடங்கு அதிகமான பலனை தரும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் அது நிச்சயம் பலன் தரும். செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு, பைரவர் வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது.

நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்குரிய கிழமை, செவ்வாய்கிழமை ஆகும். கிழமை என்றால் உரிமை என்று பொருள். செவ்வாய் பகவானுக்கு உரிமையான நாள் என்பதாலேயே செவ்வாய்கிழமை என குறிப்பிடுகிறோம். முருகப் பெருமானுக்கு திதி, நட்சத்திரம், கிழமை என மூன்று விதமான விரதங்கள் கடைபிடிக்கப்படுக்கின்றன. செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதை முருகப் பெருமான் என்பதால் செவ்வாய் கிழமை முருகன் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது. திதி அடிப்படையில் விரதம் இருந்தால் 15 நாட்களும், நட்சத்திர அடிப்படையில் விரதம் இருந்தாலும் மீண்டும் அந்த நட்சத்திரம் வருவதற்கு ஒரு மாதமும் காத்திருக்க வேண்டும். ஆனால் கிழமை அடிப்படையில் விரதம் இருப்பது குறுகிய கால விரதம் என்றாலும், மிக விரைவாக பலன் தரக் கூடியதாகும்.

செவ்வாய் பகவான், வீடு, நிலம், சொத்து ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் என்பது அனைவருக்கும் தெரியும். செவ்வாய் பகவானை வழிபட்டால் வீடு, வாகன யோகம் அமையும். அதை விட முக்கியமானது செவ்வாய் பகவான் தான் ரத்தம் தொடர்பான நோய்களுக்கும் காரணமானவர். இவரே உடல் வலிமை, தைரியம் ஆகியவற்றிற்கும் காரணமான கிரகமாக கருதப்படுகிறார். அங்காரகன் என அழைக்கப்படும் செவ்வாய் பகவானை, முருகப் பெருமானின் திருநாமங்களில் ஒன்றான குமாரன் என்ற திருநாமத்தாலும் குறிப்பிடுவதுண்டு. மனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், கல்லீரல், இடது காது, எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் ஆகியவற்றிற்கு செவ்வாய் பகவான் தான் காரணமானவராக இருக்கிறார்.

இதனால் செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து, அவருக்குரிய அதி தேவதையான முருகப் பெருமானை வழிபடுவதால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்தும் குறையும். அதோடு சில குறிப்பிட்ட வழிபாடுகளை செவ்வாய் கிழமையில் வரும் செவ்வாய் ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான காலத்தில் செய்யும் போது அதற்கு விரைவான பலன் கிடைக்கும். என்ன நினைத்து இந்த வழிபாட்டிவை செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். அதோடு வாழ்க்கையில் ஏற்றம் என்பது இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையை மாற்றும் சிறப்பான வழிபாடு என்று கூட இதை சொல்லலாம்.

செவ்வாய் கிழமையில் காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு ஒரு தட்டினை எடுத்துக் கொள்ளுங்கள். எவர்சில்வர், பிளாஸ்டிக் இல்லாத மற்ற உலோகங்களால் ஆன தட்டுக்களை பயன்படுத்துவது சிறப்பு. அதன் மத்தியில் மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்துக் கொள்ளுங்கள். 6 என்ற எண்ணிக்கையில் வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் காம்பு பகுதியை கிள்ளி எடுத்து விடுங்கள். வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் என்றாலும், அதன் காம்பு பகுதியில் மூதேவி வசிப்பதாக ஐதீகம். அதனால் அதனை அகற்றி விட்டு. ஆறு வெற்றிலைகளின் மேல், நடு, நுனி பகுதியில் மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த வெற்றிலைகளை விசிறி போல் தட்டில் பரப்பி வையுங்கள். ஆறு வெற்றிலைகளின் நுனி பகுதியும் வெளிபுறமாக இருப்பது போலவும், அடிப்பகுதி உட்புறமாக இருப்பது போலவும், அந்த வெற்றிலைகள் ஒன்றின் மீது ஒன்று படும் வகையிலும் வைக்க வேண்டும். அந்த ஆறு வெற்றிலைகளிலும் பூ வைத்து, மத்தியில் ஒரு அகல் விளக்கினை ஏற்றி வையுங்கள். நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி, அந்த விளக்கில் கிள்ளி வைத்த வெற்றிலை காம்புகளை போட்டு, விளக்கு ஏற்ற வேண்டும். ஆறு வெற்றிலைகளிலும் படும் வகையில் விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். பிறகு முருகப் பெருமானை மனதார நினைத்து, உங்களின் வேண்டுதலை சொல்லி முறையிடுங்கள். இந்த விளக்கு அரை மணி நேரமாவது பூஜை அறையில் எரிய வேண்டும்.

வெற்றிலை தீபம் மட்டுமின்றி செவ்வாய்கிழமையில் வீட்டின் பூஜை அறையில் சட்கோண கோலமிட்டு, அதன் மீது ஆறு நெய் விளக்குகள் ஏற்றியும் வழிபடலாம். இப்படி ஏற்றுவதால் அந்த ஆறு விளக்குகளிலும் முகப் பெருமானின் ஆறுமுகங்களும் எழுந்தருளி, நமக்கு அருள் செய்யும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு நைவேத்தியமாக இரண்டு வாழைப்பழங்கள் அல்லது சர்க்கரை கலந்த பால் என எது வேண்டுமானாலும் வைக்கலாம். இந்த இரண்டில் ஏதாவது ஒரு வழிபாட்டினை செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் தொடர்ந்து 6 வாரங்கள் செய்து வர வேண்டும். ஆறு வாரங்களில் இந்த வழிபாடு நிறைவு செய்வதற்குள், உங்களின் வேண்டுதல் நிறைவேற துவங்கி விடும்.



Read More

Previous Post

குழந்தைக்கு ‘அஹான்’ எனப் பெயர் சூட்டிய ரோகித்-ரித்திகா தம்பதி.. பெயருக்கான அர்த்தம் தெரியுமா?

Next Post

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிரடி அறிவிப்பு

Next Post
வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிரடி அறிவிப்பு

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அதிரடி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin