கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாத நிலையில், தற்போது அவர் பங்கேற்றுள்ளார். அதேபோன்று, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், கர்நாடகா, கேரளா, பிகார், மேற்குவங்கம் ஆகிய மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக அம்மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.


