• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவர், உறுப்பினர்கள் நியமனம்.. வளர்ச்சிப் பாதையின் தூண் என பிரதமர் பாராட்டு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 25, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவர், உறுப்பினர்கள் நியமனம்.. வளர்ச்சிப் பாதையின் தூண் என பிரதமர் பாராட்டு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 25, 2026 4:27 PM IST

புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆக்கபூர்வமாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும் அமைய வேண்டும் என்று பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியிடம் வாழ்த்துப் பெற்ற நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவர் அசோக் குமார் லாகிரி
பிரதமர் மோடியிடம் வாழ்த்துப் பெற்ற நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவர் அசோக் குமார் லாகிரி

நிதி ஆயோக் அமைப்புக்கு புதிய துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நிதி ஆயோக் அமைப்பை பாராட்டியுள்ள பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிப் பாதையின் தூண் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் கொள்கை வடிவமைப்பில் மிக முக்கியமான அங்கமாக விளங்கும் நிதி ஆயோக் அமைப்பை மத்திய அரசு தற்போது மறுசீரமைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சிப் பாதையில் இந்த அமைப்பு ஒரு ‘முக்கிய தூணாக’ உருவெடுத்துள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே இணக்கமான உறவை வளர்க்கும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவதிலும், நிர்வாகச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதிலும் நிதி ஆயோக் ஆற்றி வரும் பங்கு அளப்பரியது என்றும் மக்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும்’ திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்த அமைப்பு ஒரு உந்துசக்தியாகத் திகழ்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவராக அசோக் குமார் லாகிரி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ராஜீவ் கௌபா, பேராசிரியர் கே.வி. ராஜு, பேராசிரியர் கோபர்தன் தாஸ், பேராசிரியர் அபய் கரந்திகர், டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முழுநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Met Shri Ashok Kumar Lahiri Ji and conveyed my best wishes on his being appointed as the Vice Chairman of NITI Aayog. His rich experience in economics and public policy will greatly strengthen India’s reform journey and the journey towards becoming a Viksit Bharat. I am confident… pic.twitter.com/NQvAGNsgoN


— Narendra Modi (@narendramodi) April 25, 2026

புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆக்கபூர்வமாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும் அமைய வேண்டும் என்று பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

NITI Aayog has emerged as a vital pillar in India’s policy-making architecture, fostering cooperative federalism, furthering reforms and boosting ‘Ease of Living.’ It serves as a dynamic platform for innovation and long-term strategic thinking across sectors.

The Government has…


— Narendra Modi (@narendramodi)
April 25, 2026

வெறும் கொள்கைகளை மட்டும் வகுக்காமல், நீண்ட கால வியூகங்களை உருவாக்குவதற்கும், பல்வேறு துறைகளில் புதுமைகளைப் புகுத்துவதற்கும் நிதி ஆயோக் ஒரு துடிப்பான தளமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் பொருளாதார இலக்குகளை அடைவதற்கும், மாநிலங்களின் தேவைகளை மையமாகக் கொண்டு திட்டங்களை வடிவமைப்பதற்கும் இந்த மறுசீரமைப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவர், உறுப்பினர்கள் நியமனம்.. வளர்ச்சிப் பாதையின் தூண் என பிரதமர் பாராட்டு

Read More

Previous Post

நல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கான பாதயாத்திரை ஆரம்பம்

Next Post

இலக்கவியல் தொழில் நுட்பத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ஆற்றம் மேம்படுத்தப்படும்; கோபிந்த் சிங் தகவல் | Makkal Osai

Next Post
இலக்கவியல் தொழில் நுட்பத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ஆற்றம் மேம்படுத்தப்படும்; கோபிந்த் சிங் தகவல் | Makkal Osai

இலக்கவியல் தொழில் நுட்பத்தில் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ஆற்றம் மேம்படுத்தப்படும்; கோபிந்த் சிங் தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin