மனோகருக்கு எச்ஐவி ரிசல்ட் பாசிட்டிவ் ஆக வந்ததால், பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். நடைபெற இருந்த திருமணத்தை ரத்து செய்த போதும், மனோகர் தொடர்ந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி இளம்பெண்ணுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். அதற்கு எச்ஐவி பாதித்த உன்னை எப்படி திருமணம் செய்ய முடியும் என்று கூறி, இளம்பெண் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி மனோகர், தனது உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக செலுத்தியுள்ளார்.


