Last Updated:
IPL | 18-வது ஐபிஎல் தொடர் ஐபிஎல் தொடர் அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கியிருந்தாலும், சிஎஸ்கே ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான தொடக்கம் இன்று தான்.
சென்னை – மும்பை அணி போட்டி தொடங்கும் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து தோனி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
18வது ஐபிஎல் சீசனில் தனது முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 18-வது ஐபிஎல் தொடர் ஐபிஎல் தொடர் அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கியிருந்தாலும், சிஎஸ்கே ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமான தொடக்கம் இன்று தான். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும், ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூர்யகுமார் தலைமையிலான மும்பையும் மோதுகின்றன.
சர்வதேச அளவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி போல, ஐபிஎல்-இல் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் அனல் தெறிக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஐபிஎல் தொடரில் இரு அணிகளுமே தலா 5 முறை கோப்பையை வென்று கோலோச்சி வருகின்றன.
43 வயதான தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதுடைய வீரராக களமிறங்குகிறார். தோனியின் கடைசி சீசனாக இது இருக்கலாம் என்ற பேச்சும் உலவுவதால், வழக்கம் போல தோனியையும், அவர் அடிக்கும் ஒரே ஒரு சிக்ஸரையாவது பார்த்துவிட வேண்டும் எனவும் ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர். அதற்கேற்ப தோனியும், “ஒன் லாஸ்ட் டைம்” என்று மோர்ஸ் குறியீட்டில் (Morse) பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டுடன் சென்னை வந்திறங்கியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கு முன்னதாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டி அளித்த தோனி சென்னை அணி குறித்து மனம் திறந்துள்ளார். அதில், “சென்னை அணிக்காக நான் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். ஏனென்றால், அது என்னுடைய அணி. நான் வீல் சேரில் அமர்ந்திருந்தாலும், அவர்கள் என்னை இழுத்துச் செல்வார்கள்” என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 23, 2025 4:47 PM IST


