மெக்டொனால்டு கடையில் மாட்டிறைச்சி பர்கரை ஆர்டர் செய்த இந்தியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி, தனக்கு சைவத்துக்கு பதிலாக அசைவ பர்கரை வழங்கியதாக ஊழியர்களிடம் சச்சரவில் ஈடுபட்டார்.
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) உள்ள மெக்டொனால்டு கடையில் நடந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
NETS, PayNow பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் தேவையில்லை – Singapore Pools அதிரடி அறிவிப்பு
லிட்டில் இந்தியாவில் சந்துக்குள் இழுத்துச் சென்று தாக்கி கொள்ளை – இளைஞர் கைது
நேற்று நவம்பர் 11 அன்று இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்கில் வெளியிடப்பட்ட வீடியோவில், மஞ்சள் சட்டை அணிந்த பெண் ஒருவர் ஊழியர்களிடம் சச்சரவில் ஈடுபடுவதைக் காணலாம்.
“நான் இந்தியாவிலிருந்து வருகிறேன், (நீங்க) எப்படி இதை செய்யலாம்…” என்று அந்தப் பெண் கூறினார்.
அதற்கு “நீங்கள் இந்தியர் என்று எனக்குத் தெரியும்,” என கவுண்டரில் உள்ள ஊழியர் பதிலளிக்க, அதற்கு அந்தப் பெண், “அப்பறம் எப்படி இதை செய்ய முடிந்தது?” என்று கேள்வி எழுப்பினார்.
தாம் மெக்டொனால் கடையின் வழக்கமான வாடிக்கையாளர் என்று கூறிய அந்தப் பெண், தொடர்ந்து சைவ பர்கர்களை ஆர்டர் செய்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஆர்டர் செய்த பர்கர் “சைவம் அல்ல” என்று ஊழியர்கள் மீண்டும் மீண்டும் பெண்ணிடம் கூறி தெளிவுபடுத்தினர், அதற்கு அந்தப் பெண், “எனக்குத் தெரியும், ஆனால் அது மாட்டிறைச்சி பர்கர் என்று கூட (அதில்) குறிப்பிடப்படவில்லை” என்றார்.
அந்த மெக்டொனால்ட்ஸ் கடை மெனுவில் சைவ பர்கர் ஆப்சன்ஸ் (options) இல்லை என்று அதன் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்துக்கு முன்னர், “பர்கர் பெட்டியை தரையில் வீசி எறிந்தார்” என்றும் அந்த வீடியோவின் தலைப்பில் கூறப்பட்டது.
அந்த காணொளியை TikTok தளத்தில் லட்ச கணக்கானோர் பார்த்துள்ளனர்.
கமண்ட் பிரிவில், “ஆர்டர் செய்வதற்கு முன், உணவுகளை தேர்வு செய்வதும், அதனை ஊழியர்களிடம் சரிபார்ப்பதும் வாடிக்கையாளரின் பொறுப்பு” என்று பலர் தெரிவித்தனர்.
“இது உங்க இந்தியா இல்லை” என்றும் பலர் கருத்து கூறினர்.

