லிட்டில் இந்தியா செல்ல இருந்த பெண்ணிடம் தகாத முறையில் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய வெளிநாட்டு ஊழியர் மீண்டும் சிங்கப்பூர் வரும்போது கைது செய்யப்பட்டார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, செராங்கூன் MRT நிலையத்தில் அவர் பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஊழியர் மரணம்… பணிபுரிந்த நிறுவனத்திற்கு S$240,000 அபராதம்
ஆனால், 34 வயதான அவர் கடந்த மார்ச் மாதம் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறைத் தண்டனை
மானபங்கம் செய்த ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதால், இன்று மே 7 அன்று அவருக்கு மூன்று வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதேபோன்ற இரண்டாவது குற்றச்சாட்டு ஒன்றும் தண்டனையின்போது பரிசீலிக்கப்படும்.
என்ன நடந்தது?
இந்தக் குற்றம் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22, அன்று நடந்தது. அப்போது கட்டுமான ஊழியராக இருந்த அவர், 21 வயதுமிக்க அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் என கூறப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியாவுக்குப் பயணிக்க இருந்த அந்த பெண், செராங்கூன் எம்ஆர்டி ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தார்.
அப்போது, நடைமேடையில் நடந்து சென்ற பெண்ணின் ஷார்ட்ஸில் தன் கையை வைத்து அவர் தடவியதாக சொல்லப்பட்டுள்ளது.
இதனால் அச்சமடைந்த அந்த பெண், மீண்டும் கைவைத்துவிடுவார் என்ற என்ற எண்ணத்தில் உடனடியாக அதிகமான மக்கள் நின்றிருந்த பகுதியை நோக்கி சென்றுள்ளார்.
ஆனால், அதோடு விடாமல் மீண்டும் பெண்ணை நெருக்கமாகப் பின்தொடர்ந்து சென்று இரண்டாவது முறையாக அவர் மானபங்கம் செய்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவமும் ஒரே நேரத்தில் நடந்ததாகவும், இதனால் அந்த பெண் அதிர்ச்சி மற்றும் அச்சமடைந்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் கூறப்பட்டது.
யார் அவர்?
ஜாங் யாங் என்ற அவர் சீன நாட்டவர் என்றும், அப்போது கட்டுமான ஊழியரான அவருக்கு 34 வயதாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

