• Login
Friday, August 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 17 வருடங்களுக்கு பின் இன்று தீர்ப்பு

GenevaTimes by GenevaTimes
July 31, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 17 வருடங்களுக்கு பின் இன்று தீர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 31, 2025 8:31 AM IST

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 2008 குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு

நாட்டையே உலுக்கிய மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் இன்று (ஜூலை 31) மும்பை சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று இரவு பிக்கு சௌக் பகுதியில் உள்ள மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக  பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், ராஜா ரஹீர்கர், சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் 323 அரசு தரப்பு சாட்சிகள், 8 பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் படை, இந்த வழக்கை முதலில் விசாரித்தது. பின்னர் தேசிய புலனாய்வு முகாமை இவ்வழக்கை விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.

17 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி விசாரணை நடத்தி தீர்ப்பு வெளியிட உள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 31, 2025 8:31 AM IST

Read More

Previous Post

காதில் பூ சுத்தாது கண்ணை திறந்து விடுங்கடா

Next Post

இந்தியாவின் 100 ரூபாய் சிங்கப்பூரில் எவ்வளவு தெரியுமா?

Next Post
இந்தியாவின் 100 ரூபாய் சிங்கப்பூரில் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் 100 ரூபாய் சிங்கப்பூரில் எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin