நாட்டில் சில பகுதிகளுக்கு அம்பர் (Amber) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (07-08-2026) குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இவ் எச்சரிக்கை அறிவித்தல் இன்று முதல் நாளை (08-08-2026) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதனடிப்படையில் வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்குப் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை நிலமை காரணமாக குறிப்பிடப்பட்ட மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

