டி20 உலகக்கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வழங்கி கவுரவித்தது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மிகவும் த்ரில்லிங்காக நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது.
17 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று வெஸ்ட் இண்டீசின் பார்படோஸில் இருந்து நாடு திரும்பினர். அவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த இந்திய அணி வீரர்கள் அவரிடம் வெற்றிக் கோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றனர். வீரர்கள் ஒவ்வொரிடமும் பிரதமர் மோடி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது பிரதமருக்கும் இந்திய அணியின் ஜெர்ஸி NAMO என்ற பெயரில் 1 ஆம் எண்ணோடு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க – தன்னை ஏளனம் செய்த அதே மைதானத்தில் அரங்கை அதிர வைத்த ஹர்திக்… நெகிழ்ச்சி வீடியோ
இதன்பின்னர் மாலை 4 மணியளவில் மும்பையில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் களைகட்டின. இதற்காக நரிமன் பாயின்ட்டில் இருந்து வான்கிடே மைதானம் வரையிலான பகுதிகள் கொண்டாட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு அங்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
அங்கு வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இந்திய அணி வீரர்கள், உலகக்கோப்பையுடன் திறந்த வெளி பேருந்தில் அமர்ந்தவாறு பேரணியாக சென்றனர்.
BCCI office bearers present Team India with a cheque of Rs 125 Crores, at Wankhede Stadium in Mumbai.
The BCCI announced a prize money of Rs 125 crores for India after the #T20WorldCup pic.twitter.com/YFUj0nIggh
— ANI (@ANI) July 4, 2024
இறுதியாக மும்பை வான்கிடே மைதானத்தில் இந்திய அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஏற்கனவே அறிவித்தபடி ரூ. 125 கோடி பரிசு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)