Last Updated:
அகமதாபாத்தில் நடைபெற்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் மின்சார கார் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு முக்கியமான கனிமங்கள் கண்டுபிடிக்கப்படும் என்று அறிவித்தார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் மின்சார கார் அறிமுக நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில், இந்தியாவின் உற்பத்தித் துறை கடந்த 11 ஆண்டுகளில் 500 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக, அனைத்து மாநிலங்களும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மாருதி சுசுகி நிறுவனத்தின் இ-விடாரா என்ற முதல் மின்சார காரைக் கொடி அசைத்து அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானைச் சேர்ந்த சுசுகி நிறுவனம், இந்தியாவில் மின்சார கார்களைத் தயாரித்து ஜப்பான் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகக் கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா உற்பத்தித் துறையில் 500 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், செல்போன் உற்பத்தித் துறையில் 2,700 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
அரியவகை தாதுவான மாங்கனீசு பற்றாக்குறையால் ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், ’தேசிய அரியவகை தாதுக்கள்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு முக்கியமான கனிமங்கள் கண்டுபிடிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
August 26, 2025 6:55 PM IST
“நாடு முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டு முக்கியமான கனிமங்கள் கண்டுபிடிக்கப்படும்” – பிரதமர் நரேந்திர மோடி


