வங்கிக் கிளைகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வங்கிகளில் வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் மாா்ச் 24, 25-ஆம் தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அண்மையில் தெரிவித்தது.

