இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியது மற்றும் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து, பதுளை மேல் நீதிமன்றம், இன்று வெள்ளிக்கிழமை (28) தீர்ப்பளித்துள்ளது.
2019ஆம் ஆண்டு, பண்டாரவளை நகரில் உள்ள சுற்றுவட்டத்துக்கு அருகில் சென்ற பொலிஸ் ஜீப் ஒன்று, சமிந்த விஜேசிறியின் வாகனத்தை முந்திச் சென்றது. இது தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, அங்கு கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, அவர்களைத் தடுத்து வைத்தமை மற்றும் உடல்ரீதியான காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
இந்த வழக்கு, பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி முன்னிலையில் விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி, பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியது மற்றும் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

