உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறிய நிலையில் படுதோல்வி குறித்து எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்பினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
20 ஓவர் மற்றும் 50 ஓவர் போட்டிகளில் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அந்த அணி, கடந்த சில ஆண்டுகளாக அனுபவமில்லாத அணிகளிடம் தோல்வியடைந்து வருகிறது. பாகிஸ்தான் அணி ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருப்பார்கள்.
வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர்களை கொண்டாட தவறியதில்லை. அதேநேரம், மோசமாக விளையாடி இருந்தால் அந்த வீரர்களின் வீடுகளுக்கு செக்யூரிட்டி போடும் அளவுக்கு, நிலைமை மோசமாக இருக்கும்.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது. இந்தியாவிடம் தோல்வியடைந்த அந்த அணி, அனுபவம் அற்ற அமெரிக்கா அணியிடமும் மண்ணை கவ்வியது. கனடா மற்றும் அயர்லாந்து அணிகளிடம் பாகிஸ்தான் போராடியே வென்றது.
இதனால், பாகிஸ்தான் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டி என்ற கட்சியை சேர்ந்த எம்.பி. எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Pakistan team discussion in the Pakistan Parliament. pic.twitter.com/05tyV1CGr0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 22, 2024
நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது-
பாகிஸ்தான் அணிக்கு என்னதான் ஆச்சு? அமெரிக்காவிடம் தோற்கிறார்கள். இந்தியாவிடமும் தோற்று தொடரிலிருந்தே வெளியேறி விட்டனர். தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பாபர் ஆசம் பதவி விலக வேண்டும். அவர் சீனியர் ஆட்டக்காரர்களிடமிருந்து பாடம் பெறவில்லை. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்து, இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி, நடப்பு தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறியது. இது கடந்த 10 ஆண்டுகளில் ஏற்படாத பின்னடைவாகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
