நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சுமார் 1000 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய நியமனங்கள்
இதன்போது ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்ற போதிலும், தட்டுப்பாடு குறிப்பிடத்தக்க பிரச்சினையாகவே உள்ளது என அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதை நிவர்த்தி செய்யும் வகையில், பெப்ரவரியில் கிட்டத்தட்ட 300 புதிய நியமனங்கள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

