[ad_1]
அப்போது செங்கோட்டையன் ஆதரவாளர் என்று கருதப்பட்ட பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரியும் தனது ஆதரவாளர்களுடன் ஏகே செல்வராஜை சந்தித்து வாழ்த்து கூறி சால்வை அணிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ணாரி, ‘’ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் அத்தனை நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுச்செயலாளர் இபிஎஸ் பின்னால் உறுதியாக நிற்கிறோம். செங்கோட்டையன் கட்சிப் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கோபி, பவானிசாகர், அந்தியூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகியதாக கூறப்படுவது உண்மையில்லை’ என்று தெரிவித்திருக்கிறார்.