Last Updated:
விமானங்கள் ரத்தால் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து துபாயில் சிக்கிக் கொண்டுள்ளார்.
துபாய் விமான நிலையத்தில் தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மிக அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வேதனை தெரிவித்துள்ளார். ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்க இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தனது பயிற்சியாளருடன் துபாய் வழியாக இங்கிலாந்து செல்லத் திட்டமிட்டார்.
இதற்கிடையே, இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக விமான சேவை ரத்தானதால் துபாய் விமான நிலையத்தில் பி.வி.சிந்து மற்றும் பயிற்சியாளர் சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், துபாய் விமான நிலையத்தில் தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மிக அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பி.வி.சிந்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் இருந்த தனது பயிற்சியாளர் நல்வாய்ப்பாக தப்பியதாகவும், துபாய் விமான நிலையத்தில் பாதுகாப்பான இடத்திற்கு தாங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் பி.வி.சிந்து குறிப்பிட்டுள்ளார். நேரம் ஆக ஆக இங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறியுள்ள பி.வி.சிந்து, இந்திய தூதரகம் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Mar 01, 2026 12:51 PM IST
‘நாங்கள் உள்ள இடத்திற்கு மிக அருகில் குண்டுவெடிப்பு…’ – துபாயில் சிக்கிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து!


