Last Updated:
PM Modi Visit | அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய இடமான தீக்ஷா பூமிக்குச் சென்ற பிரதமர், அங்கு வழிபாட்டில் ஈடுபட்டார்.
நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அதன் நிறுவனர் கேஷவ பாலிராம் ஹெட்கேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்துக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு, இன்று காலை 9 மணிக்கு சென்றார்.
பிரதமருடன் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரும் சென்றனர். அங்கு அந்த அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய இடமான தீக்ஷா பூமிக்குச் சென்ற பிரதமர், அங்கு வழிபாட்டில் ஈடுபட்டார்.
2012ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு சென்ற மோடி, 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக இன்று சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Nagpur,Maharashtra
March 30, 2025 1:33 PM IST
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு சென்ற பிரதமர் மோடி… ஹேட்கேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை


