[ad_1]
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) சீனா மற்றும் ரஷ்ய அதிபர்களு டன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இதையடுத்து பிரதமர் மோடியின் சீனா, ரஷ்யா அதிபர்களின் சந்திப்பை விமர்சித்துப் பேசிவந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

ட்ரம்ப், “நான் எப்போதும் மோடியின் நல்ல நண்பராக இருப்பேன். ஆனால், இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்யும் சில விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பான உறவைக் கொண்டுள்ளன. கவலைப்பட ஒன்றுமில்லை.” என்று பேசியிருந்தார்