• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

”நடுநிலை விசாரணைக்கு தயார்” – பஹல்காம் தாக்குதல் குறித்து பாக். பிரதமர்  ஷெபாஸ் அறிவிப்பு | ready for neutral investigation into Pahalgam attack, says PM Shehbaz Sharif

GenevaTimes by GenevaTimes
April 26, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
”நடுநிலை விசாரணைக்கு தயார்” – பஹல்காம் தாக்குதல் குறித்து பாக். பிரதமர்  ஷெபாஸ் அறிவிப்பு | ready for neutral investigation into Pahalgam attack, says PM Shehbaz Sharif
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர், “சமீபத்தில் பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம், பழி சுமத்தும் விளையாட்டுக்கான மற்றொரு உதாரணமாகும். இது ஒரு முடிவுக்கு வரவேணடும். எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டின் இந்தியாவின் ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் உறுதியான பதிலடியால் நிரூபிக்கப்பட்ட படி, எந்தவொரு தவறான சாகசத்துக்கும் எதிராக தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை காப்பதற்கு பாகிஸ்தான் முழு திறனுடன் தயார் நிலையில் உள்ளது” என்று தெரிவித்தார்.

சர்வதேச விசாரணையாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜ் முகம்மது ஆசிஃப் கூறியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் புல்வெளியில் ஏப்.21 திங்கள்கிழமை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் உட்பட கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

அதேபோல் அட்டாரி எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை மூடியது, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுக்காப்பைக் குறைத்தது போன்றவை அடங்கும். இதனிடையே அட்டாரி சோதனைச் சாவடி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானியார்கள் மே 1ம் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் எச்சரிக்கை: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பிஹாரில் நடந்த விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில், “கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் பயங்கரவாதி​கள் நடத்​திய தாக்​குதலில் அப்​பாவி சுற்​றுலா பயணி​கள் சுட்டுக் கொல்​லப்​பட்டு உள்​ளனர். பஹல்​காம் தாக்​குதலில் மகனை, சகோ​தரனை, வாழ்க்​கைத் துணையை இழந்து பலர் தவிக்​கின்​றனர். இந்​தி​யா​வின் ஆன்மா மீது தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது.

தாக்​குதலை நடத்​தியபயங்கரவா​தி​கள், சதித் திட்​டம் தீட்​டிய​வர்​கள் மிகக் கடுமை​யாக தண்​டிக்​கப்​படு​வார்​கள். கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு அவர்​களுக்கு தண்​டனை வழங்​கப்​படும். பயங்கரவாதத்தை வேரறுக்​கும் காலம் வந்​து​விட்​டது. 140 கோடி இந்​தி​யர்​களின் மனவலிமையை யாராலும் உடைக்க முடி​யாது.

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய பயங்கரவா​தி​கள் அடை​யாளம் காணப்​படு​வார்​கள். அவர்​களை தேடிக்கண்​டு​பிடித்து தண்​டனை வழங்​கு​வோம். எந்​தவொரு பயங்கரவா​தி​யும் தப்ப முடி​யாது. பூமி​யின் கடைசிவரை அவர்​களை துரத்​து​வோம். தீவிர​வா​தி​களிடம் மீதமிருக்​கும் நிலத்​தை​யும் அழிக்​கும் நேரம் வந்​து​விட்​டது. நீதி நிலை​நாட்​டப்​படும்”. இவ்​வாறு அவர் பேசி​னார்.



Read More

Previous Post

ஐபிஎல் 2025: கோடிகள் புரளும் ஐபிஎல்.. போட்டிகளில் முடிவை மாற்றக்கூடிய அம்பயர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Next Post

ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் டிஏபியின் அரசியல் மரபை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – சனுசி – Malaysiakini

Next Post
ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் டிஏபியின் அரசியல் மரபை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – சனுசி – Malaysiakini

ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் டிஏபியின் அரசியல் மரபை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – சனுசி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin