கோலாலம்பூர்:
கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் இவ்வாண்டு ஜூன் வரையான ஒருவருட காலத்தில் நாட்டிலுள்ள நடுத்தர வருமானம் பெறும் மக்களின் ஊதியம் RM2,600 இருந்து RM2,745 ஆக உயர்ந்துள்ளது என்று பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மாதாந்த வருமானமாக RM2,000 வெள்ளிக்கும் குறைவாக சம்பாதிக்கும் மக்களின் எண்ணிக்கை 34.8 சதவீதத்திலிருந்து 32.2 குறைந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இந்தச் சம்பள உயர்வு ஒவ்வொரு ஆண்டும் சராசரி சம்பளத்தை உயர்த்த அரசாங்கத்திற்கு உந்துதலாக அமைகிறது என்று அவர் கூறினார்.


