யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் விமானம் தாங்கி கப்பலுக்குச் சொந்தமான சீ ஹாக் (Sea Hawk) உலங்குவானூர்தி ஒன்று அவசரமாகத் தரையிறங்கியுள்ளதாக அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படை தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஐந்தாம் கடற்படை எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அவசரநிலை எதிரிகளின் தாக்குதலால் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
காணாமல் போன நான்காவது நபர்
அத்தோடு, உலங்குவானூர்தியில் இருந்த நான்கு பணியாளர்களில் மூவர் மீட்கப்பட்டு, யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் கப்பலில் தற்பொழுது சீரான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Credit: Defence Connect
இந்த நிலையில், காணாமல் போன நான்காவது நபரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, விபத்துக்கான காரணம் குறித்தும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

