நகைக் கடன் ஒப்பந்தத்தில் கடன் தொடா்பான முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும். வாடிக்கையாளா் கடனை திரும்பச் செலுத்திய ஏழு வேலை நாள்களில் நகையை வங்கி திருப்பி ஒப்படைக்க வேண்டும். ஏழு வேலை நாள்களில் ஒப்படைக்கவில்லையென்றால், அதற்கடுத்து ஒவ்வொரு நாளுக்கும் தலா ரூ.5,000 என வாடிக்கையாளருக்கு வங்கி அபராதமாகச் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரைவு விதிகள் மீது கருத்துகளை ஆா்பிஐ வரவேற்றது.

