Last Updated:
கர்நாடகா தர்மஸ்தலாவில் 100 எலும்புகள் மற்றும் மண்டை ஓடு கண்டுபிடிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் ஒரே நாளில் சுமார் 100 எலும்புகள் மற்றும் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மங்களூரு அருகே உள்ள தர்மஸ்தலாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் என சுமார் 100 உடல்கள் புதைக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றின் அருகே உள்ள வனப்பகுதியில் விசாரணைக் குழுவினர் திங்கட்கிழமையன்று ஆறாவது நாளாக சோதனை நடத்தினர். அப்போது, புகாரளித்த தூய்மை பணியாளர் அடையாளம் காட்டிய 11ஆவது இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், மேற்பரப்பிலேயே எலும்புக்கூடு பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதில் மண்டை ஓடு, உட்பட சுமார் 100 எலும்புகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட எலும்புக்கூடு பாகங்கள் இரண்டு நபர்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒரு நீண்ட முதுகுத்தண்டு எலும்பும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், அங்குள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்த சேலையையும் அதிகாரிகள் மீட்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் பொக்லைன் இயந்திர உதவியுடன் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
August 05, 2025 6:27 PM IST
தோண்ட, தோண்ட சிக்கும் எலும்பு கூடுகள்.. மரத்தில் கட்டப்பட்டிருந்த சேலைகள்.. விசாரணையில் அடுத்தடுத்த அதிர்ச்சி!


