கோலாலம்பூர் | திங்கள், 23 மார்ச் 2026:
உலு சிலாங்கூரில் உள்ள ராசா (Rasa) ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கோலாலம்பூர் சென்ட்ரலில் இருந்து பட்டர்வொர்த் நோக்கிச் சென்ற இ.டி.எஸ் (ETS) இரயில் சேவை சுமார் 157 நிமிடங்கள் (2.5 மணி நேரத்திற்கு மேல்) தாமதமடைந்துள்ளது.
கே.எல் சென்ட்ரல் முதல் பட்டர்வொர்த்திற்கான, ரயில் எண்: EP9130 கொண்ட ரயில் மதியம் 1.40-க்குப் புறப்பட்ட இந்த இரயில், மாலை 5.45-க்கு பட்டர்வொர்த் சென்றடைய வேண்டும். ஆனால், தற்போது இரவு 8.22-க்குத் தான் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 3.02 மணியளவில் ராசா நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இந்தக் கோளாறு காரணமாக அந்தப் பாதையில் ‘ஒற்றைத் தண்டவாளப் போக்குவரத்து’ (Single-track operations) முறை பின்பற்றப்படுகிறது. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் மற்ற கொமுட்டர் (Komuter) மற்றும் இ.டி.எஸ் (ETS) சேவைகளும் சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதத்தை எதிர்கொண்டுள்ளன.
பயணிகள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நிலையத்தில் பணியில் இருக்கும் ஊழியர்களை அணுகுமாறும், அவ்வப்போது வெளியிடப்படும் அதிகாரப்பூர்வத் தகவல்களைப் பின்பற்றுமாறும் கே.டி.எம்.பி கேட்டுக்கொண்டுள்ளது. பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.




