• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தொலைபேசியில் ‘முத்தலாக்’ சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தொலைபேசியில் ‘முத்தலாக்’ சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோரக்பூர்,உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சலாவுதின் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

அந்த இளம்பெண்ணை கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தும், சித்ரவதை தொடர்ந்தது. அதனால் கடந்த 26-ந் தேதி, அந்த இளம்பெண் தனது தாயாரின் இல்லத்துக்கு வந்து விட்டார்.

இதனையடுத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு இளம்பெண்ணும், அவருடைய தாயாரும் சென்றனர். கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தனர். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர், புகாரை நிராகரித்து, வழக்குப்பதிவு செய்ய மறுத்து விட்டார்.

இதற்கிடையே, தாய் வீட்டில் இருந்த அந்த பெண்ணை மராட்டியத்தில் இருந்து கணவர் சலாவுதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் அந்த பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, விவாகரத்து செய்வதற்காக அவர் தொலைபேசியிலேயே ‘முத்தலாக்’ கூறியதாக தெரிகிறது.

இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண், இரவில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தும், அதை சப்-இன்ஸ்பெக்டர் ஏற்காததால்தான், தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டதாக இளம்பெண்ணின் தாயார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் நடந்த உள்மட்ட விசாரணையில், இளம்பெண் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் சிங்கை சஸ்பெண்ட் செய்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும், துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார். இதனையடுத்து இளம்பெண்ணின் கணவர் சலாவுதின் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



Read More

Previous Post

இந்தியாவின் முதல் டெஸ்லா சைபர்ட்ரக் காரை வாங்கிய சூரத் வைர வியாபாரி… யார் தெரியுமா…?

Next Post

ஹமாஸ் பாணியில் நகரும் பயங்கரவாதிகள் : இந்தியா கண்டுபிடித்த 22 நிலக்கீழ் சுரங்கங்கள்

Next Post
ஹமாஸ் பாணியில் நகரும் பயங்கரவாதிகள் : இந்தியா கண்டுபிடித்த 22 நிலக்கீழ் சுரங்கங்கள்

ஹமாஸ் பாணியில் நகரும் பயங்கரவாதிகள் : இந்தியா கண்டுபிடித்த 22 நிலக்கீழ் சுரங்கங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin