விநாயகப் பெருமானை நாம் எந்த நாளில் வேண்டுமானாலும் வழிபடலாம். எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். போகும் வழியில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானை பார்த்து மனதார வழிபாடு செய்துவிட்டு சென்றால் கூட அந்த காரியத்தில் நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். நீக்கமற நிறைந்திருக்கக் கூடிய விநாயகப் பெருமானை சில சூட்சமமான முறையில் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.
ஒரு முயற்சியை நாம் செய்கிறோம், அந்த முயற்சியில் நமக்கு எந்தவித தடைகளும் வரக்கூடாது என்று நினைப்பவர்கள் அவர்கள் பிறந்த கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி இரண்டு தேங்காய் எண்ணெய் தீபம் அல்லது நெய் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு கையில் ஒரு தேங்காயை வைத்துக்கொண்டு விநாயகப் பெருமானை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.

