தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்வதால் விமானக் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
சுதந்திர தினம் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. வெள்ளி ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
விமானத்தில் செல்ல பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் விமானங்களின் பயணக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சாதாரண நாட்களில் சென்னை-தூத்துக்குடி இடையே கட்டணம் 4 ஆயிரத்து 301 ரூபாயாக இருக்கும் நிலையில், தற்போது இரு மடங்கு உயர்ந்து 10 ஆயிரத்து 796 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்னை-மதுரை இடையே சாதாரண நாட்களில் 4 ஆயிரத்து 63 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 11 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னை- திருச்சி இடையே கட்டணம் 2 ஆயிரத்து 382 ரூபாயில் இருந்து 7ஆயிரத்து 192 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க:
அஞ்சல் அட்டையில் கார்கில் ஓவியங்கள்… விருதுநகரை சேர்ந்த ஓவியரின் கைவண்ணம் இது…
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
