தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (14-06-2026) இடம்பெற்றுள்ளது.
இதனால் குறித்த திணைக்கள இணையத்தளத்தின் தொடருந்துகளின் நேர அட்டவணை தொடர்பான விபரங்களை அறியும் பகுதி செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கைகள்
இந்நிலையில் குறித்த இணையத்தளத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதல் மோசடிகள் குறித்துத் தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

