முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
அதில், “கடந்த மார்ச் 22, 2025 அன்று, சென்னையில் ‘நியாயமான எல்லை நிர்ணயம்’ குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம் நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியத் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம். கூட்டத்தில் எங்கள் ஆலோசனை மூலம் எழும் குரல்கள் அரசியலை கடந்து, நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தை நாடும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடிமக்களின் கவலைகளை பற்றியது.