கோலாலம்பூர்:
நாளை நாடு தழுவிய நிலையில் கொண்டாடப்படவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அதன் முக்கிய நிகழ்வான ரத ஊர்வலம் வெகு விமரிசையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நேற்று இரவு முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பத்துமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியின் வெள்ளி ரதம் நேற்று இரவு 9 மணிக்கு தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது ஜாலான் ஈப்போவிலுள்ள மக்கள் ஓசையின் தண்ணீர் பந்தலை வந்தடைந்துள்ளது.

வள்ளி, தெய்வானை சமேதரராக எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தவண்ணம் வீதி உலா வந்துகொண்டிருக்கிறார்.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான நமது சொந்தக்கடவுளான முருகனது ரத ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ள பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நிற்கின்றன.

மக்கள் ஓசை குடும்பத்தினர் ரத யாத்திரையில் கலந்து கொண்டுள்ள பக்தர்களின் பசி தீர்க்கும் வண்ணம் அனைவருக்கும் உணவு, பானம் வழங்கி வருகின்றனர்.

The post தைப்பூசம்: மக்கள் ஓசையின் தண்ணீர் பந்தலில் வெள்ளி ரதம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

