Last Updated:
தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளார்.
தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் குழு அமைத்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக, இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், தொழில்நுட்ப நிபுணருமான நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்ட இன்ஸ்டாகிராம் காணொளியில், “மாணவர்களின் நலனுக்காக இந்திய அரசு தொடர்ந்து பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் இப்போது சிறையில் வாடுகிறார்கள். நாங்கள் ஏற்கனவே விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளோம். நாளை நாடாளுமன்றத்தில், கடுமையான விதிகளைக் கொண்ட புதிய சட்டத்தை முன்வைக்கவுள்ளோம்.
இருப்பினும், நாம் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் அமைய வேண்டும். இவையனைத்தையும் கருத்தில் கொண்டு, தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, உலகப்புகழ் பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.


