Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி சென்னை கிண்டியில் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்தை சந்தித்து, அவரது காப்புரிமை பெற்ற கமகா பாக்ஸ் இசைக் கோர்வையை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்
தேர்தல் பணிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகத்தை சந்தித்து அவரது இசைக் கோர்வை குறித்து ஆவலுடன் கேட்டறிந்தார்.
இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கினார். அவரை பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் தனது குடும்பத்தினருடன் சந்தித்துப் பேசினார். அப்போது, ரமேஷ் விநாயகம் தான் உருவாக்கி வரும் ’கமகா பாக்ஸ்’ என்ற இசைக் கோர்வை முறையின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைத்தார்.
கமகா பாக்ஸ் என்பது காப்புரிமை பெற்ற இந்தியாவின் முதல் இசைக் கோர்வையாக உள்ளது. இது கர்நாடக, இந்துஸ்தானி மற்றும் நாட்டுப்புற இசையை எளிதாக கற்றுக் கொள்ள உதவுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இசையமைப்பாளர் ரமேஷ், இந்திய இசையைப் பிரபலப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய இசையை சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல இது ஒரு புதுமையான முயற்சி என்றும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளுக்கு மத்தியில்… ’கமகா பாக்ஸ்’ இசைக் கோர்வை முறையை ஆர்வமுடன் கேட்ட பிரதமர் மோடி


