Last Updated:
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
தேர்தல் நேரத்தில் கைப்பற்றப்படும் பணம், மதுபாட்டில்கள் என்ன செய்யப்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6, 2025 அன்றும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11, 2025 அன்றும் நடைபெற உள்ளது. அனைத்துத் தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14, 2025 அன்று ஒரே நாளில் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலில் சுமார் 7.42 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய உள்ளனர். ஆட்சியை அமைக்க 122 இடங்கள் பெரும்பான்மை தேவை.
இந்தத் தேர்தல், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சியான மகா கூட்டணி ஆகிய இரு பிரதான கூட்டணிகளுக்கும் இடையே கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது. NDA கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) ஆகியவை முதன்மை கட்சிகளாக உள்ளன. மறுபுறம், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார், இவருடன் காங்கிரஸ் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
தேர்தலையொட்டி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையம் கணக்கில் வராத பணம், மது பாட்டில்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவற்றில் கைப்பற்றப் படும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்தால் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும். இல்லாவிட்டால் கைப்பற்றப்படும் பணம் அரசின் கருவூலத்திற்கு அனுப்பப்படும்.
October 31, 2025 4:38 PM IST


