• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேசிய நலன் மற்றும் மத உணர்வுகளில் சமரசம் கிடையாது…! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
September 8, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தேசிய நலன் மற்றும் மத உணர்வுகளில் சமரசம் கிடையாது…! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

Last Updated:September 07, 2025 2:11 PM IST

அமெரிக்காவில் பசுக்களுக்கு அசைவ உணவுகள் வழங்கப்படுவதாக வந்த தகவல்கள் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நெட்வொர்க்18-க்கு அளித்த பேட்டியில், தேசிய நலன்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மத உணர்வுகளில் ஒருபோதும் சமரசம் செய்யப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.

Rapid Read
News18News18
News18

அமெரிக்காவில் பசுக்களுக்கு பெரும்பாலும் கோழியின் கழிவுகள் மற்றும் இரத்தத்தில் இருந்து தயாரிக்கப்படும் புரொட்டீன் கலவை போன்ற அசைவ உணவுகள் வழங்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். நெட்வொர்க்18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில் பேசிய பியூஷ் கோயல், “விவசாயிகள், மீனவர்கள், எம்எஸ்எம்இ-கள் மற்றும் மத உணர்வுகள் போன்ற தேசிய நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது” என்று கூறினார்.

“தேசிய நலன்களைப் பாதிக்கும் எந்த விஷயத்திலும் அது விவசாயம், மீன் வளம், எம்எஸ்எம்இ துறை அல்லது மத உணர்வுகள் போன்றவற்றில் இந்தியா எப்போதும் தெளிவான புரிதலை உறுதி செய்த பிறகே எந்த ஒப்பந்தத்தையும் முன்னெடுக்கும்” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் வேளாண் இறக்குமதி நடைமுறைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு தரநிலைகள் குறித்த சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், பியூஷ் கோயலின் கருத்துகள், மத மற்றும் நெறிமுறை மதிப்புகளை மீறும் எந்த நடைமுறைகளும் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதைக் காட்டுகின்றன.

மேலும், இந்தியாவின் பாதுகாப்பான வர்த்தக கொள்கையை வலியுறுத்திய அவர், “எங்கள் விவசாயிகள், எங்கள் மீனவர்கள், எங்கள் எம்எஸ்எம்இ-கள் அல்லது எங்கள் மத மதிப்புகளின் நலன்களில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்” என்றும் அவர் உறுதியாக கூறினார்.

இதையும் படிங்க: வாயடைத்துப் போகவைக்கும் இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த விஷயங்கள்…! என்னென்ன தெரியுமா…?

சந்தை தாராளமயமாக்கலைவிட உள்நாட்டு தொழில் மற்றும் கலாச்சார பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த நிலைப்பாடு, இந்தியாவின் நீண்டகால வர்த்தக அணுகுமுறையை பிரதிபலிக்கும் அணுகுமுறையாகத் தெரிகிறது. கடுமையான லேபிளிங் மற்றும் தயாரிப்பு தோற்றம் வெளிப்படுத்தல் போன்ற இந்தியாவின் கோரிக்கைகள், மேற்கத்திய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளில் பலமுறை உராய்வை ஏற்படுத்தி வந்துள்ளன.

இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. விரைவில் சேவையை தொடங்குகிறது இந்த ட்ரெய்ன்

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த ஆர்வம் காட்டினாலும், பியூஷ் கோயலின் கருத்துகள், பொருளாதார ஆதாயத்திற்காக அடிப்படை சமூக, கலாச்சார மற்றும் நெறிமுறை மதிப்புகளை இந்தியா ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறாக, பியூஷ் கோயலின் நிலைப்பாடு, இந்தியாவின் வர்த்தக கொள்கையில் பொருளாதார வளர்ச்சிக்கு அடுத்ததாக, சமூக மதிப்புகள் மற்றும் உள்நாட்டு தொழில் பாதுகாப்பும் அவசியமான தளங்களாக இருப்பதை வெளிப்படுத்துகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 07, 2025 2:11 PM IST

Read More

Previous Post

நாட்டின் வடக்கு உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை!

Next Post

மும்பை: 23 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து – ஒருவர் பலி – 19 பேர் படுகாயம் | Makkal Osai

Next Post
மும்பை: 23 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து – ஒருவர் பலி – 19 பேர் படுகாயம் | Makkal Osai

மும்பை: 23 மாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து - ஒருவர் பலி - 19 பேர் படுகாயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin