அதேநேரம், தமிழக கல்வி அமைப்புமுறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தாமதப்படுத்துவது, நிா்வாக ரீதியிலான பிரச்னை மட்டுமல்ல; அது, அரசமைப்புச் சட்டம் மற்றும் கூட்டாட்சி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. மாநில கல்வி மேம்பாட்டுக்கான நிதியை முடக்கிவைப்பது, கல்வி உரிமையின்படி மாநில சுயாட்சி, இறையாண்மை மற்றும் மொழிவாரி உரிமைகளின் நேரடி மீறலாகும்.