ஈரானிய மகளிர் கால்பந்து அணியின் வீராங்கணைகள் நாடு திரும்பியதையடுத்து, தலைநகர் தெஹ்ரானில் அவர்களுக்கு வரவேற்பு விழா நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“ஈரானில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஏனென்றால் ஈரான் எங்கள் தாய்நாடு,” என்று வீராங்கணைகள் தெரிவித்ததாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களின் முதல் அலை தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, ஆசியக் கோப்பைப் போட்டி ஒன்றுக்கு முன்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது வீரர்கள் மௌனம் காத்தனர்.
இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், அணியின் ஏழு உறுப்பினர்களுக்கு அஸ்திரேலியாவில் தஞ்சம் வழங்கப்பட்டது.
இந்நிலையிலேயே தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏழு பேரில் ஐவர் பின்னர் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டு, வியாழக்கிழமையன்று வடக்கு ஈரானிய நகரமான தப்ரிஸுக்குத் திரும்பியபோது, ஆரவாரத்துடன் திரண்ட மக்கள் கூட்டத்தினரால் வரவேற்கப்பட்டனர்.
இரண்டு வீராங்கணைகள்மேலும், அஸ்திரேலியாவிலேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் பிரிஸ்பேன் ரோவர் கிளப்புடன் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

