தெம்பனீஸ் அவென்யூ 10 இல் நடந்த சங்கிலி தொடர் மோதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஆறு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.
இந்த விபத்து குறித்து செப்.4 ஆம் தேதி அன்று மாலை சுமார் 6:30 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தது.
இது தொடர்பான காணொளிகள் வலைத்தளங்களில் பரவியது, பாசிர் ரிஸ் டிரைவ் 12 நோக்கிச் செல்லும் வழியில் தெம்பனீஸ் அவென்யூ 10 இல் ஐந்து வாகனங்கள் மோதி நின்று கொண்டிருந்தன.
இதில் ஒரு குழந்தை சாலை ஓரத்தில் உள்ள தடுப்பில் அமர்ந்திருந்தது, மேலும் மற்றொரு குழந்தையை ஆடவர் ஒருவர் சுமந்து செல்வதையும் காணொளியில் காண முடிந்தது.
சாலை தடுப்பில் மேலும் இரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு பேர் கே.கே. பெண்கள் & குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மற்ற 3 பேர், 60 வயது ஓட்டுநர், 32 வயது ஓட்டுநர் மற்றும் 40 வயது ஓட்டுநர் ஆகியோர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர்.
காவல்துறையினரின் விசாரணைகளுக்கு 60 வயதான பெண் ஓட்டுநர் ஒருவர் உதவி வருகிறார்.
சிங்கப்பூரில் செப்.1 – 4 வரை சோதனை: நீண்டகால அனுமதியுடையோர் உட்பட 123 பயணிகள் சிக்கினர்!

