Last Updated:
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரிலிருந்து விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா ஏ அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் இந்த மாதம் 13, 16 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்த 3 போட்டிகளுமே குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அணிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக திலக் வர்மாவுக்கு பொறுப்பை பிசிசிஐ வழங்கியுள்ளது.
அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்- திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), அபிசேக் சர்மா, ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகாம், மானவ் சுதார், ஹர்ஷித் ரானா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, பிரப்சிம்ரன் சிங்.
நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது. இருப்பினும் இந்த தொடரில் சீனியர் வீரர் ரோஹித் சர்மாவின் ஆட்டம் பாராட்டை பெற்றது. 2 போட்டிகளில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும் கடைசி ஒருநாள் போட்டியில் அரைச்சதம் கடந்து தனது ஃபார்மை நிரூபித்தார்.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரிலிருந்து விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
November 05, 2025 8:36 PM IST


