இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் 82
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் 48
பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உலகக் கும்பல்
அதிகளவான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக் கும்பல்களுக்கு
இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் காவல்தறையினர் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

