ஷா ஆலம்: கோலா லங்காட் பந்திங், கம்போங் ஷேரி சீடிங், ஜாலான் நூரியில் உள்ள மூன்று வீடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வயது சிறுவன் கருகி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார், தனது துறைக்கு அதிகாலை 2.44 மணிக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.
தெலுக் பாங்லிமா காராங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், பந்திங் மற்றும் கேஎல்ஐஏ ஆகியவற்றிலிருந்து இயந்திரங்களுடன் 17 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. பெற்ற முதற்கட்ட தகவலின்படி, வீட்டில் மூன்று வயது குழந்தை சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதிகாலை 3.30 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் கூறினார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, அதிகாலை 4.15 மணியளவில், வரவேற்பறையில் சிறுவன் கருகி இறந்து கிடப்பதைக் கண்டோம் என்று அவர் கூறினார்.




