The post தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியைத் தடுத்த கொடூர தந்தை!! appeared first on SG Tamilan.
தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றாத கொடூர தந்தை…
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியை குழந்தைகளின் தந்தை தடுத்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த சிறுவர்கள் இருவருக்கு 6 வயது மற்றும் 3 வயது. ஒரு குழந்தைக்கு 10 மாதங்கள் ஆகிறது.ஜூலை 7 அதிகாலை லாலர் பூங்காவில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது வீட்டில் 28 வயதுடைய தந்தை,29 வயதுடைய தாய், 7 குழந்தைகளும் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.
உயிர் பிழைத்த 4 குழந்தைகளும், அவர்களின் 29 வயது தாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த 4 குழந்தைகளும் 4 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள். அதிகாரிகள் கட்டிடத்திற்குள் நுழைய முயன்றபோது, அந்த முயற்சியை 28 வயதுடைய தந்தை தடுத்ததாக காவல்துறை தெரிவித்தது.
தீ கொழுந்துவிட்டு எரியும் போது குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அவர் தற்போது மயக்க நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் காவல்துறை கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
Follow us on : click here
The post தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியைத் தடுத்த கொடூர தந்தை!! appeared first on SG Tamilan.
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin