தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம், தாணேயில் உள்ள டிஎம்சி சட்ட கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய நீதிபதி எஸ்.ஓகா, ‘கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நீதித்துறை தீா்ப்புகள் நாட்டின் பல மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன.

