• Login
Monday, October 20, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அமோகம் | Sales of textiles, crackers and household goods are booming in chennai for diwali festival

GenevaTimes by GenevaTimes
October 20, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்: சென்னையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அமோகம் | Sales of textiles, crackers and household goods are booming in chennai for diwali festival
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தீ​பாவளி பண்​டிகை இன்று நாடு​முழு​வதும் கோலாகல​மாக கொண்​டாடப்​படு​கிறது. புத்​தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து இனிப்பு வழங்கி வீடு​தோறும் தீபம் ஏற்றி வைத்து பண்​டிகையை மக்​கள் கொண்​டாடினர். இதை முன்​னிட்டு சென்​னை​யில் ஜவுளி, பட்​டாசு மற்​றும் வீட்டு உபயோகப் பொருட்​களின் விற்​பனை அமோக​மாக நடந்​தது.

தீபாவளி பண்​டிகை என்​றாலே, துணிக்​கடைகள் அதி​கம் உள்ள சென்​னை​யின் முக்​கிய கடை வீதி​களில் கூட்ட நெரிசல் இயல்​பாகவே அதி​கரித்து விடும். அந்​தவகை​யில், தீபாவளிக்கு முந்​தைய நாளான நேற்​று, சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் உள்ள ஜவுளி கடைகளில் காலை முதலே மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலை​யிலும், நேற்று விடு​முறை நாள் என்​ப​தால் மக்​கள் தங்​களது குடும்​பத்​தினருடன் ஜவுளி கடைகள், பட்​டாசு கடைகளை நோக்கி படையெடுத்​தனர்.

சென்​னை​யில் தி.நகர், புரசை​வாக்​கம், வண்​ணாரப்​பேட்​டை, சவுக்​கார்​பேட்​டை, பெரம்​பூர், பாரி​முனை உள்​ளிட்ட முக்​கிய கடை வீதி​களில் மக்​கள் குடை பிடித்​த​படியே ‘ஷாப்​பிங்’ செய்​தனர். துணி​கள், நகைகள், குழந்​தைகளுக்​கான விளை​யாட்​டுப் பொருட்​கள், வீட்டு உபயோகப்​பொருட்​கள் என அனைத்​து​வித பொருட்​களும் ஒரே இடத்​தில் வாங்க பலரும் தி.நகரிலே குவிந்​த​தால் அப்​பகு​தி​யில் திரும்​பிய திசையெல்​லாம் மனித தலைகளாகவே காணப்​பட்​டன.

மேலும் நேற்று கடைசி நேர விற்​பனை என்​ப​தால், சிறிய ஜவுளி கடைகளில், ஏராள​மான புதிய ரக ஆடைகள் பல விற்று தீர்ந்​தன. தீபாவளி ஆஃபரில் வீட்டு உபயோக பொருட்​களை வாங்​கு​வ​தி​லும் மக்​கள் ஆர்​வம் காட்​டினர். தீபாவளியை முன்​னிட்டு பல்​வேறு சலுகைகள் வழங்​கப்​பட்​ட​தால், சென்​னை​யின் பல பகு​தி​களில் இருசக்கர வாக​னம் மற்​றும் செல்​போன்​களின் விற்​பனை​யும் அமோக​மாக நடந்​தது.

இது​மட்​டுமில்​லாமல், சாலை​யோர கடைகளி​லும் மக்​கள் கூட்​டம் அதி​க​மாக காணப்​பட்​டது. கம்​மல், வளை​யல், தோடு​கள், காலணி​கள், பெல்ட்​டு​கள் விற்​பனை ஜோராக நடை​பெற்​றது. காவல்​துறை​யினர் தொய்​வின்றி கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். வண்​ணாரப்​பேட்டை எம்​.சி. ​சாலை​யில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சில்​லரை மற்​றும் மொத்த ஜவுளிக்​கடைகளில் கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் கடுமை​யான போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதே​போல், போரூர், பாடி, குரோம்​பேட்டை பகுதி கடைகளி​லும் கூட்​டம் இருந்​தது.

ஜவுளிக் கடைகளை தொடர்ந்​து, இனிப்​பு, கார கடைகளில் கூட்​டம் அதி​க​மாக காணப்​பட்​டது. பட்​டாசு கடைகளை பொருத்​தவரை பட்​டாசு விற்​பனை நேற்று பல பகு​தி​களில் மந்​த​மாக​வும் பின்​னர் விறு​விறுப்​பாக​வும் நடந்​தது. சென்னை தீவுத்​திடலில் அமைக்​கப்​பட்​டிருந்த பட்​டாசு கடைகளி​லும் மக்​கள் கூட்​டம் காணப்​பட்​டது. இதே​போல், பூக்​கடைகள், நகைக் கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்​ஸ், பழக்​கடைகளி​லும் மக்​கள் கூட்​டம் அதி​க​மாகவே இருந்​தது. இதனால், சென்​னை​யில் முக்​கிய கடைவீ​தி​கள் அமைந்​துள்ள சாலைகளில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்பட்​டது.

இதனிடையே சென்​னை​யில் இருந்து இயக்​கப்​பட்ட 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட அரசு சிறப்பு பேருந்​துகள் மூல​மும் ரயில்​கள், ஆம்னி பேருந்​துகள் மூல​மும் சுமார் 8 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொந்த ஊர் சென்​றுள்​ளனர். இதுத​விர அவர​வர் சொந்த வாக​னங்​களி​லும் லட்​சக்​கணக்​கானோர் சொந்த ஊர் சென்​றுள்​ளனர்.

இதனால் ஜிஎஸ்டி சாலை​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்​டது. இதற்கு தீர்​வாக மாற்​றுப்​பாதை​யும் அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதே​போல் தீபாவளி முடிந்து மீண்​டும் சென்னை தி்ரும்​ப​வும் உரிய போக்​கு​வரத்து வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும் தேவைக்​கேற்ப பேருந்​துகள் தடை​யின்றி இயக்​கப்​படும் என்​றும் அமைச்​சர் சிவசங்​கர் தெரிவித்​துள்​ளார்​.



Read More

Previous Post

“யூடியூப் சேனலை நடத்த இப்படியா…” – ஸ்ரீகாந்த்திற்கு கவுதம் கம்பீர் கண்டனம்! | விளையாட்டு

Next Post

மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | antwerp court allows fugitive businessman mehul choksi to extradition

Next Post
மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | antwerp court allows fugitive businessman mehul choksi to extradition

மெகுல் சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | antwerp court allows fugitive businessman mehul choksi to extradition

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin