ஓயாத மக்கள் அலை: கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்களின் காலணிகள், பைகள் மற்றும் துணிகள் உள்ளிட்ட உடைமைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்த நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை வரை தொடா்ந்தது. ஆனால், மகா கும்பமேளாவுக்கு ச் செல்ல தில்லி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடைமேடை 16-இல் சிறப்பு ரயில்கள்: தில்லியில் இருந்து பிரயாக்ராஜுக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் அனைத்தும் நடைமேடை 16-இல் இருந்து புறப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வரும் நாள்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பிரயாக்ராஜுக்கு செல்வோரும், அங்கிருந்து வருவோரும் அஜ்மீா் நுழைவாயிலை பயன்படுத்துமாறும் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மற்ற ரயில்கள் வழக்கமான நடைமேடைகளில் இருந்தே இயக்கப்படுவதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், பிரயாக்ராஜ் செல்ல ஞாயிற்றுக்கிழமை நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், திங்கள்கிழமை ஐந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

