கடந்த இரு மக்களவைத் தோ்தல்களிலும் தில்லியின் அனைத்துத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது.
ஜூன் 1-இல் இறுதிக்கட்ட தோ்தல்: நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டத் தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, 5 கட்ட வாக்குப் பதிவுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.
முதல்கட்டத்தில் 66.14 சதவீதம், இரண்டாம் கட்டத்தில் 66.71 சதவீதம், மூன்றாம் கட்டத்தில் 65.58 சதவீதம், நான்காம் கட்டத்தில் 69.16 சதவீதம், ஐந்தாம் கட்டத்தில் 62.2 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக 57 தொகுதிகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஜூன் 4-ஆம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

