• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!

GenevaTimes by GenevaTimes
May 23, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புது தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலம் முழுவதும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் புது தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், அம்மாநில அரசு அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, புது தில்லியின் சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் சிங் இன்று (மே 23) கூறுகையில், மே 22 ஆம் தேதி வரை 23 கோவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் பயண விவரங்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்துடன், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“தில்லி அரசு எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளது. நாங்கள் ஏற்கனவே மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக் குழுக்களுடன் ஒருங்கிணைந்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

அவசரகால தயார்நிலை குறித்து கூறுகையில், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் எச்சரிக்கையாகவுள்ளதாகவும், உடனடி செயல்பாட்டுக்கு அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தயார்நிலையிலுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கரோனா பாதிப்புகள் அதிகரிப்பதனால், தில்லி அரசு அம்மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துக்கள் மற்றும் தடுப்பூசிகளை தயார்நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வேகமெடுக்கும் கரோனா பரவல்?ஹரியாணாவில் புதியதாக 4 பேருக்கு பாதிப்பு!

Read More

Previous Post

இன்றைய சிந்தனைக்குரிய கேலிச்சித்திரம்

Next Post

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோ ரூட்..! என்ன தெரியுமா?

Next Post
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோ ரூட்..! என்ன தெரியுமா?

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோ ரூட்..! என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin