• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்சாட்டு!

GenevaTimes by GenevaTimes
January 4, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்சாட்டு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தில்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதாக ஆம் ஆத்மி அரசு மீது மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக இன்று பேசிய அசாதுதீன் ஓவைசி, “தில்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒட்டுமொத்த தில்லியின் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. மருத்துவமனைகளோ பள்ளிகளோ முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்படுவதில்லை. அந்தப் பகுதிகளில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

இதையும் படிக்க | சாதி அரசியலின் பெயரால் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளில் எத்தனை வீடுகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன? அரசு திட்டங்களில் முஸ்லிம்களுக்கான பங்கு என்ன? என்று தெரிந்துகொள்ள ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டு இரு விண்ணப்பங்களை நான் தாக்கல் செய்துள்ளேன். ஆம் ஆத்மி அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி. தேர்தலுக்கு முன்னர் மட்டுமே அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

பாஜகவின் ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் என்பது வாக்காளர்களின் விருப்பத்திற்கு மாறானது மட்டுமல்ல. அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று அவர் தெரிவித்தார்.

2020 சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 62 இடங்களை வென்றது. முன்னதாக, 2015 சட்டப்பேரவை தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.

15 ஆண்டுகள் தொடர்ச்சியாக தில்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி கடந்த இரு சட்டப்பேரவை தேர்தல்களில் எந்த இடத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

பதவியேற்கும் நிலையில் சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப் : நீதி மன்றம் பிறப்பிக்க போகும் தீர்ப்பு

Next Post

Ind vs Aus | 3 மணி நேரம் மைதானத்தில் இல்லாத பும்ரா..! மருத்துவமனையில் ஸ்கேன்..! என்ன நடந்தது?

Next Post
Ind vs Aus | 3 மணி நேரம் மைதானத்தில் இல்லாத பும்ரா..! மருத்துவமனையில் ஸ்கேன்..! என்ன நடந்தது?

Ind vs Aus | 3 மணி நேரம் மைதானத்தில் இல்லாத பும்ரா..! மருத்துவமனையில் ஸ்கேன்..! என்ன நடந்தது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin